Saturday, January 26, 2013

தெரிந்துக் கொள்வோமா-4 [நெப்போலியன்]

தோற்றமும் தகுதியும்: ஓவியர் ஒருவர்மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். ஏழ்மையில் வாடி கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஓவியரிடம் சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டியளித்தார். 

ஆனால்ஓவியரின் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக் கொண்டிருக்கையிலேயேபுரிந்து கொண்டார் நெப்போலியன். 

பேட்டி முடிந்ததும் ஓவியரும் எழுந்தார். முதலில் அருவருப்புக் காட்டிய நெப்போலியன் பின்பு பரிவுடன் பேசியதைக் கண்ட ஓவியர் வியப்போடு அதன் காரணத்தை நெப்போலியனிடமே கேட்டுவிட்டார். 

சிரித்துவிட்டு நெப்போலியன் சொன்னார்,""ஓவியக் கலைஞரே! முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ப வரவேற்பு. ஆனால் பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கேற்ப விடை கொடுக்கிறோம்'' என்றார்.
:-

No comments: