Saturday, December 21, 2013

குளிர்கால உணவு....

குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும்.
அதனால், இந்த குளிர்காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தெரிவுசெய்து உட்கொள்ள வேண்டும்.


இதன் மூலம், குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம்.


இஞ்சி சிகிச்சை


மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும்.


இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும்.


ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.






தேன்


இந்த குளிர்காலங்களில் உங்கள் உணவில் தேனை சேர்த்து கொள்ளுவது மிகச்சிறந்த ஒன்றாகும். இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவி புரியும்.






பாதாம்


பாதாமானது அதிக அளவில் பலன்களை அளிக்ககூடியதால் இது குளிர்காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும்.


இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரியும். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.






எள்ளு விதைகள்


குளிர்காலங்களில் எள்ளு விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலனை பெறலாம். குளிர்காலங்களில் உங்கள் உணவில் வெப்பம் தரும் உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.






ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்


இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும்.


மீன்களில் அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவி புரியும்.


இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.






காய்கறிகள்


உங்கள் டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உங்களுக்கு தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவி புரியும்.


அதிக அளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை உட்கொள்ள வேண்டும்.




நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்....

ஈடு இணையில்லா தலைவர்- காமராஜர்....

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். 

கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் “எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்” என்று சொல்லி விட்டார்.

வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து “நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள்.

எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்” என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் “கப்சிப்” ஆகிவிட்டனர்.

மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உண்மையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.

அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார் —

Saturday, November 9, 2013

மற்றுமோர் அற்புதப்பதிப்பு....

சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும் (பகுதி 1) ஸ்ட்ரிங்க் தியரி பற்றி கொஞ்சம் அடிப்படையாக ஒரு கட்டுரை எழுதினேன். கொஞ்சம் நீளம் அதிகம்தான். விருப்பினால் படியுங்கள். இது பிடித்தது என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில், இதன் இரண்டாம் பகுதியைப் பதிகிறேன். எப்போழுதாவது நீங்கள் இதை யோசித்தது உண்டா? மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் கிலோமீட்டர்களுக்கு (384,403 km) அப்பால் இருக்கும் சந்திரனைத் தனது ஈர்ப்பு விசையால் பூமி இழுத்துவைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா? இவ்வளவு தூரத்தில் இருக்கும், பெரிய அளவுள்ள சந்திரனைப் பூமி கவர்ந்து வைத்திருக்க வேண்டுமென்றால், அந்த ஈர்ப்பு சக்தி எவ்வளவு வலிமையுள்ளதாக இருக்க வேண்டும் சொல்லுங்கள்? அதுமட்டுமில்லாமல், பூமியில் இருக்கும் எதையுமே தன்னை விட்டுப் பிரிந்து போகாமல் கவர்ந்து வைத்திருக்கிறது புவியீர்ப்பு விசை. பாரசூட்டின் உதவியுடன் ஒருவர் கீழே குதித்தால், பூமி தன்னை எந்த அளவுக்கு இழுக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்வார். அவ்வளவு மிகையான வலுவுடையது ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தரையில் கிடக்கும் பந்தைத் தனது கையால் எந்த ஒரு சிரமமுமில்லாமல் ஒரு குழந்தை தூக்குகிறது. பூமி, தனது ஈர்ப்பு விசையால் பந்தைத் தரையில் இழுத்து வைத்திருக்கிறது அல்லவா? அந்த ஈர்ப்புவிசை பந்தை இழுத்து வைக்காவிட்டால், பந்து தரையில் நிற்காமல் மேலே பறந்து போய்விடுமல்லவா? இது போலத்தானே, நியூட்டனும் அப்பிள் மரத்திலிருந்து அப்பிள் பழங்கள் ஏன் மேலே பறந்து போகாமல் கீழே விழுகின்றன என்று சிந்தித்து ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். சந்திரனையே இழுத்துவைத்திருக்கும் அளவுக்குப் பெரிய விசையைக் கொண்ட அதே புவியின் ஈர்ப்பு விசைதானே, பந்தையும் இழுத்து வைத்திருக்கிறது. ஆனால், ஒரு குழந்தையால் ஈர்ப்பு விசையை எதிர்த்துப் பந்தைச் சுலபமாகத் தூக்கக் கூடியதாக இருக்கிறது அல்லவா? இப்போது ஈர்ப்பு விசையென்பது மிகமிக வலிமை குறைந்த ஒன்றாக அல்லவா தெரிகிறது? எங்கோ குழப்பமாக இருக்கிறதல்லவா? ஒருபுறம் அதிக வலிமையானதாக இருக்கும் ஈர்ப்புவிசை, இன்னொருபுறம் மிக மோசமான அளவுக்கு வலிமை குறைந்ததாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? விஞ்ஞானிகள் 'தலையால் மண்கிண்டி நீர் எடுக்கும்' பிரயத்தனமாக இவ்வளவு காலமும் இந்தக் கேள்விக்கு இருட்டிலேயே பதிலைத் தேடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதுதான் வெளிச்சம் மெல்லத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய போதுதான், எப்பொழுதும் மோதிக் கொள்ளும் ஆன்மீகமும், அறிவியலும் இணைந்து ஒரு புள்ளியில் ஒடுங்கும் நிலைக்கு வருவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதைப் பற்றி விபரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமும் கூட. அறிவியலும், ஆன்மீகமும் தமக்கென வேறு வேறான பாதைகளைக் கொண்டவை. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. ஆன்மீகம் இயங்கும் தளத்தில் அறிவியலும், அறிவியல் இயங்கும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குவதில்லை. இயற்பியல் விதிகள், தர்க்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தளத்தில் அறிவியலும், நம்பிக்கை என்னும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குகின்றன. ஆனால் இவை இரண்டுமே சமயங்களில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. ஆன்மீகம் அறிவியலின் தளத்திற்கோ, அறிவியல் ஆன்மீகத்தின் தளத்திற்கோ நுழைய முற்படும் போது இந்த மோதல்கள் ஏற்படுகின்றன. சூரியன், பூமியைச் சுற்றுகின்றது என்று நம்பிக்கையை முன்வைத்து மதங்களால் கருத்துச் சொல்லப்பட்ட போது, கோபெர்னிகஸ் (Nocolaus Copernicus) அதை மறுத்து, சூரியனைத்தான் பூமி சுற்றுகின்றது என்று கூறியதில் ஆரம்பித்து, கலிலியோ, டார்வின் என இந்த மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இவை படிப்படியாக அதிகரித்து, 'பிக் பாங்க்' (Big Bang) என்று சொல்லப்படும் அண்டத்தின் பெருவெடிப்பு வரை வந்திருக்கின்றது. அண்டத்தின் (Universe) தோற்றம், ஒரு மிகச்சிறிய புள்ளி பெரிதாக வெடித்ததால் ஏற்பட்டது என்று சொல்வதை மதங்களும் ஆன்மீகமும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன. இதை ஏற்றுக் கொண்டால் வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு எதிராக நடந்து கொள்வதாகிவிடும். 'கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்தார். பூமி வெறுமையுமாகவும், இருளுமாகவும் இருந்தது. கடவுள் ஒளி உண்டாகட்டும் என்றார். வெளிச்சம் உருவாகியது. பின்னர் ஜீவராசிகளையும், மனிதனையும் உருவாக்கினார்'. பூமியும், அண்டமும், மனிதனும் உருவாகிய விதத்தை வேத நூல்கள் இப்படித்தான் சொல்கின்றன. இந்தக் கருத்தையே உலகில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளும் நம்புகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பொதுமைக் கருத்தாக இது முதன்மை வகிக்கிறது. ஆனால், குறுகிய காலத்தில் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்த அறிவியல், இந்தக் கருத்துக்கு எதிராகத் திடீரென ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டது. 'பூமியோ, சூரியனோ, அண்டமோ கடவுளால் உருவாக்கப்பட்டவை அல்ல. சிறு புள்ளியாக இருந்த ஒரு பருப்பொருள், தவிர்க்க முடியாத ஒரு கணத்தில் பெருவெடிப்பாக (Big Bang) வெடித்ததன் மூலம் உருவாகியதுதான் அண்டம், சூரியன், பூமி எல்லாமே என்று நவீன அறிவியல் கூறியது. அண்டத்தைப் படைத்தது கடவுள்தான் என்று சொல்லும் ஆன்மீகத்தின் முன்னால், இந்தக் கருத்து மிகப்பெரிய தடைக் கல்லாக வந்து விழுந்தது. மதங்களின் வேத நூல்களில் சொல்லப்பட்டவைகளை, இந்தக் கருத்து மறுக்கின்றது என்ற அளவில், இதற்கு என்ன பதில் சொல்வது என்று மதங்கள் திகைத்தாலும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. அறிவியல் சொல்லிய இந்தக் கருத்துக்கு எதிரான, மிகச் சரியான ஒரு வாதத்தை மதங்களும் முன்வைத்தன. அந்த வாதம், அறிவியலுக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. 'மிகச் சிறிய ஒரு பருப்பொருள் பெரிதாக வெடித்ததனால் இந்த அண்டம் தோன்றியது என்றால், அந்த மிகச் சிறிய பருப்பொருளை உருவாக்கியது யார்? ஒரு பொருள் உண்டு என்றால், அதைப் படைத்தவன் ஒருவன், அல்லது ஒரு சக்தி நிச்சயம் இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே அண்டத்தையே உருவாக்கும் அளவுள்ள சக்தி வாய்ந்த அந்தச் சிறிய பருப்பொருளையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும். அதைப் படைத்தவனை அல்லது ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்கிறோம்' என்று மிக எளிமையாக, தனது வாதத்தை முன்வைத்தது ஆன்மீகம். இந்த வாதத்துடன் எல்லாமே முடிந்து போனது. மிகச் சரியானதும், யாரும் முறியடிக்க முடியாததுமான பதிலடியாக இது இருந்தது. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒருவர், இலக்கியப் பாராட்டு விழாவொன்றில் இந்தக் கருத்தைக் கூறியுமிருந்தார். மறுக்கவே முடியாத இந்த வாதத்துக்கு அறிவியலால் முதலில் பதில் கூறவே முடியவில்லை. 'பிக் பாங்க்' பற்றிப் பேசும் போது, ஆன்மீகவாதிகளால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறிவியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழப்பமும் சிலகாலம்தான் நீடித்தது. எந்தக் கேள்விக்கு அறிவியலால் பதில் கூற முடியாது என்று நம்பப்பட்டதோ, அதற்கு அறிவியல் ஒருநாள் பதில் கூறியது. தன்னை நிதானப்படுத்திக் கொண்ட அறிவியல், "அண்டம் உருவாகக் காரணமான 'மிகச் சிறிய பருப்பொருளை' யாராவது ஒருவர்தான் உருவாக்க வேண்டும், அது தானாக உருவாக முடியாது என்று சொல்வதையும், அதைக் கடவுள்தான் உருவாக்கினார் என்பதையும் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால், இப்போது கடவுளை யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வி மிஞ்சுகிறதல்லவா? இந்தக் கேள்விக்கு, 'அப்படி இல்லை, கடவுளை யாரும் உருவாக்கவில்லை. கடவுளை யாரும் உருவாக்கவும் முடியாது. அவர் தானே தோன்றியவர்' என்று பதில் சொல்லப்பட்டால், அண்டம் உருவாகக் காரணமான பருப்பொருளும் ஏன் தானே தோன்றியிருக்க முடியாது?" என்று தனது எதிர் வாதத்தை முன்வைத்தது. இதற்கு மேல் இந்த விசயத்தில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு தர்க்க ரீதியான பதிலாக அது இருந்தது. அறிவியலுக்கு எதிராக ஆன்மீகம் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. "நேற்று ஒன்றை உண்மையென்று அறிவியல் சொல்லிவிட்டு, இன்று வேறு ஒன்றை உண்மையென்று அதுவே மறுத்துச் சொல்கிறது. இன்று உண்மையென்று சொல்லப்படுபவையும் நாளை மறுக்கப்படாலாம். நாளை வேறு ஒன்று உண்மையாகலாம். எனவே அறிவியல் சொல்லும் எதுவும் நிரந்தர உண்மை கிடையாது" என்கிறது ஆன்மீகம். இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். ஆனால் அறிவியல், "இன்று இதுதான் உண்மையென்று தெரிந்துவிட்டால், நேற்றுச் சொன்னதை மறுத்து ஒதுக்க அறிவியல் தயாராக இருக்கிறது. ஆனால் மதம் அதற்கு எப்போதும் தயாராகவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எழுதியவற்றை இன்றும் உண்மை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. மதம் தன் கருத்துகளைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றத் தயங்குகிறது" என்று மதத்திற்கு எதிராக கேள்வியைத் திருப்பிக் கொள்கிறது. அத்துடன் அறிவியல் தன் முடிவுகளுக்கான தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுக்கிறது. "அறிவியல் தனது கண்டுபிடிப்புகளின் முடிவுகளைக் கோட்பாடுகள் (Theory), விதிகள் (Rule) என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. கோட்பாடுகள் எப்போதும் மாறக் கூடியவை. இன்று ஒரு கோட்பாடு உண்மையாக இருக்கும் போது, நாளை இன்னுமொரு கோட்பாடு வந்து அதை இடம் மாற்றும். ஆனால் விதிகள் அப்படியானவை அல்ல. விதிகள் எப்போதும் கணிதச் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாண்மையான கணிதச் சமன்பாடுகள் மாற்றமில்லாதவை. என்றுமே உண்மையானவை. 1900 ஆண்டுகளுக்கு முன்னர் பைதகரஸினால் (Pythagoras) முன்வைக்கப்பட்ட கணிதச் சமன்பாடு இன்று கூட மாற்றமில்லாமல் இருப்பதை இதற்கு முக்கிய உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே கோட்பாடுகளாகச் சொல்லப்படும் அறிவியல் முடிவுகளை விடக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு விதிகளாகச் சொல்லப்படும் முடிவுகளில் உண்மை முழுமையாக இருக்கும்". அறிவியல் கூறுவது போல, இயற்பியலாளர்களால் உருவாக்கப்பட்ட கணிதச் சமன்பாடு ஒன்றுதான் எதிரெதிராக மோதிக் கொண்டிருக்கும் அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒரு புள்ளியில் ஒட்ட வைக்க முயற்சிக்கிறது. அதுதான், இன்று எல்லாராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். நாம் ஸ்ட்ரிங்க் தியரிக்குள் நுழைவதற்கு முன் மிகத் தீவிரமான, சிக்கலான இயற்பியலுக்குள் நாம் காலடி வைக்க வேண்டும். புரிவதற்குச் சிரமமாக அவை இருந்தாலும், இன்றைய காலத்தில் அனைவருமே தெரிந்திருக்க வேண்டியவை. "சார்....! மூடி வைத்துவிட்டு எங்க போறீங்க? கொஞ்சம் நில்லுங்க........! நான் ஒன்றும் இயற்பியல் பாடம் எடுக்கப் போவதில்லை. நீங்கள் பயப்படவே தேவையில்லை. நான் என்னதான் சொல்கிறேன் என்று கொஞ்சம் அமைதியாகப் படித்துத்தான் பாருங்களேன்! இதுவரை இயற்பியல் பாடங்களாக இருந்த இவை இப்போது ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களாக ஆகிக் கொண்டு வருகின்றன. அதனால் பொறுமையாக வாசியுங்க. சமீபத்தில் கூட 'கடவுள் துகள்' (Higgs Boson) கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இயற்பியல் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பேசப்பட்ட ஒரு விசயமாகவில்லையா? அது போல இதையும் நினைச்சுக்கோங்க". நவீன விஞ்ஞானம் தனது வலது கையில் 'குவாண்டம்' (Quantum) என்னும் அணுக் கருவுக்குள் இருப்பவை பற்றிய ஆராய்ச்சியையும், இடது கையில் 'யூனிவேர்ஸ்' (Universe) என்னும் அண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு, இரண்டையும் எப்படி ஒன்றாக இணைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கும் ஒரு கணித விதியை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற 'ஐன்ஸ்டைன்' (Einstein) கூடத் தனது இறுதி இருபது வருட காலங்களை அப்படி ஒரு கணிதச் சமன்பாட்டை உருவாக்கவே செலவிட்டார். எப்போதும் கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு அதைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே அவர் வேலையாயிற்று. இறுதியில் அப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாமலே அவர் இறக்கவும் நேரிட்டது. "கண்டுபிடிக்க முடியாத ஒரு கணிதச் சமன்பாட்டை அவர் ஏன் கண்டுபிடித்தே தீர வேண்டும் என நினைத்தார்? அப்படி ஒரு சமன்பாடே இல்லாமல் இருக்கலாம் அல்லவா?" என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஐன்ஸ்டைன் அப்படி நினைக்கவில்லை. "அணுக்களும், அண்டமும் 'பிக் பாங்க்' என்னும் வெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்னர் ஒன்றாக, ஒரே புள்ளியாக, சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றன. அந்தக் கணத்தில் இந்தச் சக்திகள் எல்லாமே ஒன்றாக ஒரு கணித விதியின் கீழ் சேர்ந்து இருந்திருக்கின்றன. அதனால் அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருந்தே தீர வேண்டும்" என்று நம்பினார். அந்தச் சமன்பாட்டைத்தான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of Everything) என்பார்கள். பிணைக்கப்பட்டிருக்கின்றன. திட அணுக்கரு விசை (Strong Nuclear Force), திடமற்ற அணுக்கரு விசை (Weak Nuclear Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பவைதான் இந்த நான்கு அடிப்படை விசைகளுமாகும். இந்த நான்கு அடிப்படை விசைகளினாலேயே அணுக்கள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் என அண்டம் முழுவதுமே பிணைக்கப்பட்டிருக்கின்றன. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், 'பிக் பாங்' என்னும் பெருவெடிப்பு நடந்தது. இந்தப் பெருவெடிப்பின் முன்னால் மிகச் சிறிய ஒரு புள்ளி போன்ற ஒன்றாகத்தான் அண்டம் இருந்திருக்கிறது. அண்டம் சிறியதாக இருந்த போது, மேலே குறிப்பிட்ட நான்கு விசைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, சமப்படுத்தபட்ட நிலையில் விசையற்று அமைதியாக இருந்திருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பருப்பொருளில் இருந்து ஈர்ப்புவிசை முதலில் பிரிந்தது. அதைத் தொடர்ந்து திட அணுக்கரு விசையும் அதிலிருந்து விலகியது. அதனால் ஏற்பட்ட உந்தலினால் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பினால் 'வெளி' (Space) உருவாகப் போகும் கணத்தில் ஆறு விதமான குவார்க்குகள் (Quarks) உருவாகின. அதைத் தொடர்ந்து, திடமற்ற அணுக்கரு விசையும், மின்காந்த விசையும் பிரிந்தன. இப்போது அடிப்படையான நான்கு விசைகளும் தனித்தனியாகப் பிரிந்து நின்றன. இந்தக் கணத்தில் ஆறு விதமான லெப்டான்கள் (Leptons) உருவாகின. ஆறு விதமான குவார்க்களில் மேல்குவார்க் (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) ஆகிய இரண்டும் சேர்ந்து ப்ரோட்டான்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கின. அண்டம் மிகப் பெரியதாக விரிவடைந்தது. இவையெல்லாம் ஒரு செக்கனுக்குள் நடந்து முடிந்தது. அண்டமும் பாரிய வடிவில் உருவெடுத்தது. 'பிக் பாங்க்' பெருவெடிப்பின் அடுத்த கட்ட நிலையில் தோன்றியவை குவார்க்குளும். லெப்டான்களும்தான். இவற்றின் பெயர்களைப் பார்த்து நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. அணு ஒன்றைப் பிரித்துக் கொண்டு போகும்போது, அதனுள் காணப்படும் உப அணுத்துகள்கள்தான் (Subatomic Particles) இவை. அண்டம் தோன்றும் போது எவை உருவாகியனவோ, அவைதான் அணுவுக்குள்ளும் இருக்கின்றன. அணு என்பதைப் பிரிக்க முடியாது என்னும் கருத்து ஆரம்பத்தில் விஞ்ஞானிகளிடையே இருந்திருக்கிறது. ஆனால் இலத்திரன், புரோட்டான், நியூட்ரான் என்று அது பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நியூட்ரானும், புரோட்டானும் பிரிக்கப்பட்டன. அப்படிப் பிரித்துப் பார்த்த போது, அவை இரண்டுக்குள்ளும் இருந்தவை ஒரேவிதமான குவார்க்குகள் மட்டும்தான். அதாவது பூமியில் உள்ள அனைத்துமே குவார்க்குகளால் உருவானவைதான். இந்த நிலையில் நான்கு அடிப்படை விசைகளையும் இணைத்து ஒரே சமன்பாட்டில் கொண்டுவர முடியும் என்ற சிந்தனை உருவாகியது. ஆனால் கொண்டுவர முடியயாமல் போயிற்று. ஐன்ஸ்டைனில் ஆரம்பித்த இந்தத் தேடல் அதற்கு அப்புறம் அனைத்து இயற்பியலாளர்களையும் ஆட்டிப்படைத்தது. இதைக் கண்டுபிடிப்பதே தங்கள் நோக்கம், தங்கள் வாழ்வு என்று பலர் பாடுபட்டார்கள். ஒரு வகையில் இந்தக் கணிதச் சமன்பாடு சிருஷ்டியின் ஆரம்ப முடிச்சு என்றே சொல்லலாம். இதைக் கண்டுபிடித்துவிட்டால், அண்டத்தின் சிருஷ்டி இரகசியம் மொத்தமாகப் புரிந்துவிடும். இந்த நிலையில் மின்காந்த விசையையும், திடமற்ற அணுக்கரு விசையையும் ஒன்றாக இணைத்து மூன்று இயற்பியலாளர்கள் சாதனை செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் சலாம் (Abdul Salam), ஷெல்டன் கிளாஸ்கோவ் (Sheldon Glashow), ஸ்டீபன் வைன்பேர்க் (Steven Weinberg) ஆகிய மூவருக்கும் இதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது இயற்பியலாளர்களிடையே ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியது. அதனால் தொடர்ந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால் ஏதோ ஒரு தவறு நேர்ந்து கொண்டே இருந்தது. ஈர்ப்பு விசையை மற்ற விசைகளுடன் இணைக்க முடியாமல் இருந்தது. அப்போதுதான், ஈர்ப்பு விசையையின் வலிமை, வலிமையற்ற தண்மைகள் பற்றிய சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. ஒரு வகையில் பார்த்தால் இந்த அண்டத்தில் உள்ள எல்லாமே ஈர்ப்பு விசையினால் ஒன்றையொன்று கவர்ந்தபடியே இருக்கின்றன. மிகவும் வலிமையான சக்தியாக அது இருக்க வேண்டிய நிலையில், வலிமையற்றதாகக் காணப்படுகிறது. அண்டத்தில் உள்ள வெற்றிடமெங்கும் இந்த ஈர்ப்பு விசை பரவியிருக்கிறது. 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பூமியைத் தனது ஈர்ப்பு விசையினாலேயே இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறது சூரியன். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் இருப்பதெல்லாமே மிகப்பெரிய வெற்றிடம். இந்த வெற்றிடத்தினூடாக எப்படிப் பூமியைச் சூரியன் இழுக்கிறது? எதைக் கொண்டு இழுக்கிறது? இழுக்கப் பயன்படுவது எதுவானாலும், அது பூமியில் இருந்து சூரியன் வரை 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் கிராவிட்டான்கள் (Graviton) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த கிராவிட்டான் என்பது ஒரு போஸான் (Boson) வகையைச் சேர்ந்தது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஹிக்ஸ் போஸான்' போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராவிட்டானின் ஏதோ ஒரு செயல்பாட்டினால்தான், விசைகளை ஒன்றாக்கும் சமன்பாடு சாத்தியமாகவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் நவீன இயற்பியல், கிராவிட்டானின் இயக்கம் வயலினில் அல்லது கிட்டாரில் இருக்கும் அதிர்விழையில் (Strings) ஏற்படுத்தும் அதிர்வுகளின் தொழிற்பாடு போன்றதாக இருக்கிறது என்று கண்டுபிடித்தது. இந்த அதிர்விழைத் தண்மையினால், கிராவிட்டான்கள் இடம்விட்டு இடம் நகர்வதாலேயே வலிமையற்றதண்மை ஏற்படுகிறது என்ற முடிவுக்கும் வந்தது. விஞ்ஞானிகளின் இந்த முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. முழுமையான கணிதக் கணிப்பீடுகளை வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. கணித முடிவுகள் என்றுமே மாறாதவை. அணுக்கருவுக்குள் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் இரண்டையும் பிரித்துப் பார்த்த போது அவற்றினுள் ஒரே விதமான குவார்க்குகள் இருந்தன அல்லவா? நவீன இயற்பியலில், குவார்க்குகளுக்குள் என்ன இருக்கும் என்று ஆராய்ந்த போது கிடைத்த முடிவுகள் ஆச்சரியமானவை. குவார்க்குகளுக்குள்ளும் கிராவிட்டான் போல, மிகமிகச் சிறிய அதிர்விழைகள் (Strings) அதிர்ந்து கொண்டிருந்தது புரிந்தது. அதாவது அணுவைக் கடைசி வரை பிரித்து இறுதியில் அதனுள் என்ன இருக்கிறதென்று பார்த்தால் அங்கு ஒன்றுமே இல்லை. அங்கு இருப்பது எல்லாம் இசை மட்டும்தான். நூண்ணிய இழைகள் அதிர்வதினால் ஏற்படும் இசை மட்டுமே அங்கு காணப்படுகிறது. நான், நீங்கள், கல், நாற்காலி என அனைத்துமே இசையினால் உருவாக்கப்பட்டவர்கள். என்ன நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மை. அணுவுக்குள் இருக்கும் உப அணுத்துகள்கள் கூட இந்த அதிர்விழைகளாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அண்டம் முழுவதும் பரவியிருக்கும் கிராவிட்டான்களும் அதிர்விழைகளாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது எங்கும் இசை. எங்கும் நாதம். 'அண்டத்தில் இருப்பது பிண்டத்தில்' என்று சொல்வது போல, அணுமுதல் அண்டம் வரை இசையின் இராச்சியம் நடந்து கொண்டிருக்கிறது. நமது ஒட்டு மொத்த அண்டமும் ஓயாத ஒரு சிம்பனி (Symphony) போல முழங்கிக் கொண்டிருக்கிறது. "நாத விந்து கலாதி நமோ நம" என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் ஞாபகம் வருகிறதல்லவா? தாள லயத்துடன் சிவனால் ஆடப்படும் நடனம்தான் இந்தப் பிரபஞ்சம் என்ற கருத்து நம்மிடையே உள்ளதல்லவா? 'ஓம்' என்னும் ரீங்காரத்தில்தான் பிரபஞ்சமே இயங்குகிறது என்று ஆன்மீகம் சொல்கிறது அல்லவா? இவையெல்லாமே இங்கு சரியாக பொருந்துகின்றன. அது மட்டுமில்லை, "ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது" என்று பைபிள் சொல்கிறதும் அதுவும் இங்கு பொருந்துகிறது. வார்த்தை என்பதும் ஒலிதானே! அண்டம் இசையினால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு அறிவியல் வந்துவிட்டது. இதை ஆன்மீகம் எப்போதோ சொல்லியிருக்கிறது. அறிவியல், ஆன்மீகம் இரண்டும் இந்தப் புள்ளியில் ஒன்றாகச் சந்திக்கின்றன. அறிவியலின் உச்சியில் இருந்த நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் எப்படியோ அறிந்து கொண்டு அவற்றை ஆன்மீகத்தினூடாக நமக்கு விளக்க்க முயற்சித்தும் இருக்கலாம். அணு முதல் அண்டம் வரையுள்ள எல்லாமே அதிர்விழைகளால் (Strings) உருவாக்கபட்டன என்பதை மையமாக வைத்து ஸ்ட்ரிங்க் தியரி என்னும் புதிய கோட்பாடு உருவாகியது. அந்தக் கோட்பாட்டின் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்னும் கணிதச் சமன்பாட்டை தீர்க்க முயன்ற போது எல்லாமே சுலபமாகப் பொருந்தின. சரிசெய்யவே முடியாது என்று நினைத்த சமன்பாட்டை இதன் மூலம் சரிசெய்ய முடிந்தது. இயற்பியலாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஸ்ட்ரிங்ஸை அடிப்படையாக வைத்து கணிதச் சமன்பாடு ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே அனைத்து விசைகளையும் ஒன்றிணைக்கும் சமன்பாடு என்ற முடிவுக்கும் வந்தனர். அந்த வேளையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஸ்ட்ரிங்க் தியரியை வைத்து இன்னுமொரு கணிதச் சமன்பாடு உருவாகியது. அதன் பின்னர் இன்னுமொன்று. இப்படிப் படிப்படியாக ஐந்து சமன்பாடுகள் ஸ்ட்ரிங்க் தியரியால் உருவாக்கப்பட்டன. எல்லாமே சரியான சமன்பாடுகள்தான். அனைத்தும் நான்கு அடிப்படை விசைகளை இணைத்து உருவாக்கப்பட்டவைதான். இப்போது இயற்பியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். கணித முடிவு என்றாலே, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு எப்படி ஐந்து தீர்வுகள் இருக்க முடியும்? இருந்தால் ஒரேயொரு கணிதச் சமன்பாடு மட்டும்தான் இருக்க முடியும். உண்மை என்பது ஒன்றுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இப்படி ஐந்து சமன்பாடுகள் எப்படிச் சாத்தியம் என்று குழம்பிப் போனார்கள். இந்த ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளைக் கண்டுபிடித்தவர்களில் அசோக் சென் (Ashoke Sen) என்னும் கல்கத்தாக்காரரும் ஒருவர். ஒரு உண்மைக்கு ஐந்து தீர்வுகள் இருக்க முடியாது என்னும் அடிப்படையில் இந்தச் சிக்கல்களுக்கும் 'எம் தியரி' (M Theory) என்னும் பெயரில் ஒரு முடிவு வந்தது. கிராவிட்டான்கள் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசை பெரிதாக இருந்தாலும் ஏன் இவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்ற சிந்தனை மூலம் இந்த 'எம் தியரி' பிறந்தது. 'எம் தியரி' மூலம், உருவாக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் வேறு வேறல்ல, எல்லாமே ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது. இறுதியாக ஒரே ஒரு கணிதச் சமன்பாடுதான் உண்மை என்ற முடிவும் கிடைத்தது. இந்த முடிவுகளுக்கு எப்படி இயற்பியலாளர்கள் வந்தார்கள்? ஏன் ஐந்து விதமான ஸ்ட்ரிங் தியரிகள் உருவாகின என்று பார்க்கப் போனால், பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse), பல்பரிமாணங்கள் (Multidimensions), மெம்பிரான் (Membrane) என்று மிக நவீன இயற்பியலுக்குள் நான் செல்ல வேண்டும். இந்தக் கட்டுரையின் நீளம் கருதி அவற்றை இங்கு சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். உயிர்மை ஆசியர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்னுமொரு முழுமையான கட்டுரையாக இவற்றை நான் உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். -Raj Siva

மிக மிக மிக அருமையான பதிவு.... இப்போதுதான் விஞ்ஞானம் சரியான பாதையில் பயனிப்பதாக நான் எண்ணுகிறேன்...

இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்) -ராஜ்சிவா

20ம் நூற்றாண்டில் நம்பவே முடியாத அறிவியல் விதிகளை வெளியிட்டு, உலகையே நிமிர்ந்து உட்கார வைத்தவர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன். சாத்தியமே இல்லை என்று நினைக்கும் பல இயற்பியல், கணிதக் கோட்பாடுகளை அவர் வெளியிட, திகைத்துப் போனது உலகம். நேரம் (Time) ஒரு வெளியில் (Space) இயங்கும் போது சுருங்குகிறது என்றும், ஒளியானது ஈர்ப்பு விசையினால் வளைகிறது என்றும் ஆச்சரியமான இயற்பியல் கோட்பாடுகளை ஐன்ஸ்டைன் சொன்னார். இவற்றை எல்லாம் பின்னர் பரீட்சித்துப் பார்த்த போது உண்மை என்று தெரிய வந்தது. ஐன்ஸ்டைன் மேல் அதீத நம்பிக்கையும், மரியாதையும் உலகெங்கும் உருவாகியது. இவர் சொன்னவை எதுவுமே தப்பாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு சக விஞ்ஞானிகள் வர ஆரம்பித்தனர். ஐன்ஸ்டைன் வெளியிட்ட வேறொரு கோட்பாடுதான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of everything) என்பதாகும். அதாவது, பெரிதாக விரிந்திருக்கும் அண்டத்திற்கும், சிறிதாக இருக்கும் அணுவுக்கும் அடிப்படையாக இருக்கும் விசைகள் (forces) அனைத்தும் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும் என்று அந்த விதி சொன்னது. ஐன்ஸ்டைன் உயிருடன் இருக்கும் வரை அப்படி ஒரு சமன்பாட்டை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் ஐன்ஸ்டைனில் இருக்கும் நம்பிக்கையினால், அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருக்குமென, அந்தக் கணிதச் சமன்பாட்டைத் தேடிப் புறப்பட்டனர் இளம் நவீன இயற்பியலாளர்கள். 


இறுதியாக அந்தச் சமன்பாட்டை நவீன இயற்பியலாளர்கள் கண்டும் பிடித்தனர். ஆனால், ஒரு சமன்பாடு மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கணிதச் சமன்பாடுகள் பெரும்பாலும் ஒரு மாறாத விதிக்கு (Law) உட்பட்டே அமைகின்றன. ஒரு விதிக்கு உட்பட்டு அமையும் கணிதச் சமன்பாடு, எந்தக் காலத்துக்கும் மாறாமல் உண்மையானதாக இருக்கும். உண்மை எப்போதும் ஒன்று என்பதால், ஒரு விதிக்கு எப்போதும் ஒரு கணிதச் சமன்பாடே இருக்க முடியும். ஆனால் இங்கு ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குழப்பமே அதிகரித்தது. காரணம் அந்த ஐந்து சமன்பாடுகளும் சரியானதாக இருந்தன. கண்டுபிடிக்கவே முடியாது என்று நம்பிய 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்னும் கோட்பாட்டிற்கு முடிவு கிடைத்தாலும், அந்த முடிவில் ஒரு குழப்பம் இருந்தது. ஒரு சமன்பாட்டைத் தேடிப் போகும் போது, கிடைத்ததோ ஐந்து சமன்பாடுகள். அந்தச் சமன்பாடுகளின் அடிப்படைக் கோட்பாட்டின் பெயர்தான் 'ஸ்ட்ரிங் தியரி' (String Theory) என்பதாகும். அதாவது அணுவுக்குள் இருக்கும் துகள்களைப் பிரித்துப் பார்த்தால், அங்கே இறுதியாகக் காணப்படுவது 'அதிர்ந்து கொண்டிருக்கும் நுண்ணிய இழைகள்தான்' என்கிறது ஸ்ட்ரிங் தியரி. அத்துடன் அணு முதல் அண்டம் வரை எங்கும் அதிரும் இழைகளே பரவியிருக்கின்றன என்றும் சொல்கிறது ஸ்ட்ரிங் தியரி. 

இதுவரை நாம் டிசம்பர் மாத உயிர்மை இதழில் பார்த்திருந்தோம். இந்தச் சிக்கலை விஞ்ஞானிகள் எப்படி எதிர் கொண்டார்கள்? அதன் மூலமாக அவர்கள் கண்டுகொண்ட புதிய முடிவுகள் என்ன? என்பவற்றைத்தான் நாம் இப்போது விரிவாகப் பார்க்கப் போகின்றோம். ஸ்ட்ரிங் தியரியின் சிக்கல் முடிச்சு அவிழ்க்கப்பட்ட போது, நமக்குக் கிடைத்த அனைத்துமே பிரமிப்பூட்டும் ஆச்சரியங்கள்தான். நம்பவே முடியாத கோட்பாடுகள் அவை. நமது அடிப்படை நம்பிக்கைகளைக் கூட அசைத்துப் பார்க்கும் முடிவுகளாக அவை இருந்தன. 'எம் தியரி' (M Theory), பல்பரிமாணங்கள் (Multi dimensions), மெம்பிரான் (Membrane), பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse) எனப் புதிய பிரமிப்பூட்டும் ஆச்சரியங்களாக அவை இருந்தன. அவை எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக முடிந்த அளவுக்கு நாம் நாம் பார்க்கலாம்.

பிக் பாங்க் வெரு வெடிப்பினால் உருவான 'யூனிவேர்ஸ்' என்று அழைக்கப்படும் அண்டத்தில், பில்லியன் பில்லியன் அளவில் காலக்ஸிகளும், நெபுலாக்கள் என்றழைக்கப்படும் தூசுப்படலமும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அண்டம் முழுவதும் பரவியிருக்கின்றன. ஈர்ப்பு விசை ஏற்படுவதே கிராவிட்டான்கள் (Graviton) என்னும் துகள்கள் மூலம்தான். அதனால் இந்த கிராவிட்டான்கள் பிரபஞ்ச விண்வெளியெங்கும் பரவி, ஈர்ப்புவிசையாக மாறி இருக்கின்றன. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளும், துகள்களும் மட்டுமில்லாமல் கிராவிட்டான்களும் கூட அதிர்விழைகளாகவே (Strings) அதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அடிக்கடி பார்க்கும் 'ரப்பர் பாண்ட்' (Rubber Band) எப்படி இருக்குமோ, அதேபோல மிக மிக நுண்ணிய வடிவத்தில் இந்த அதிர்விழைகள் காணப்படும். ஒரு ரப்பர் பாண்ட் வட்ட வடிவமாகவும் இருக்கும். அதே நேரத்தில் இடையில் அறுத்து விட்டால் இரண்டு நுனிகளையுடைய ஒரு நேரான வடிவத்திலும் இருக்குமல்லவா? அது போல, இந்த அதிர்விழைகளும் 'மூடிய இழை' (Closed String), 'திறந்த இழை' (Open String) என இரண்டு விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. கிராவிட்டான்கள் மூடிய வட்டவடிவமான அதிர்விழைகளாகவும், ஏனைய அனைத்தும் திறந்த அதிர்விழைகளாகவும் இருக்கின்றன. 

இந்த ஸ்ட்ரிங்குகளை (அதிர்விழைகளை) மையமாக வைத்து உருவாகியதுதான் ஸ்ட்ரிங் தியரியாகும். ஆனால் உருவாகியதோ ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளாகும். அந்த ஐந்து தியரிகளுமே உண்மையானவை. தப்பே இல்லாதவை. இங்குதான் குழப்பம் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஏதோ தப்பு நடக்கின்றது என்பதை நவீன இயற்பியலாளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். இறுதியில் அந்தத் தப்பும் என்னவென்று கண்டுபிடிக்கப்பட்டது. எட்வார்ட் விட்டன் (Edward Witten) என்பவர் 1990 இல் இந்த ஐந்து சமன்பாடுகளையும் ஒன்று சேர்த்துப் புரட்சிகரமான கோட்பாடொன்றை வெளியிட்டார். அவர் கூறிய கோட்பாடு 'எம் தியரி' (M theiry) என்ற பெயரையும் பெற்றுக் கொண்டது. ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளுக்கும் பொதுவாக ஒரே சமன்பாட்டுடன் அந்த எம் தியரியும் உருவாக்கப்பட்டது. 

விட்டன் வெளியிட்ட 'எம் தியரி' சொல்வது இதுதான். "இதுவரை நாம் அண்டத்தில் மூன்று பரிமாணங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனுடன் ஐன்ஸ்டைன் கூறிய ஸ்பேஸ்டைம் (Spacetime) நான்காவது பரிமாணமாகிறது. அத்துடன் பரிமாணங்கள் நின்றுவிடவில்லை. இவை தவிர்ந்து மேலும் ஆறு பரிமாணங்கள் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் உரியவை. ஆறாவது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐந்து ஸ்ட்ரிங்க் தியரிகள் இருப்பதற்கும், அவை உண்மையான சமன்பாடுகளாக இருப்பதற்கும் இதுதான் காரணம். ஒன்றை ஒன்று பிரதிபலிக்கக் கூடிய விம்பங்கள் போன்றவைதான் இந்தப் பரிமாணங்கள். மொத்தமாக பத்துப் பரிமாணங்கள் உள்ளன."

நாம் வாழும் பூமியிலும், அண்டத்திலும் முன்பின், இடம்வலம், மேல்கீழ் என்ற மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை மட்டுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. அதற்கு மேல் நான்காவதாக இன்னுமொரு பரிமாணம் உள்ளதென்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மொத்தமாக 10 பரிமாணங்கள் இருக்கின்றன என்று எம் தியரி சொல்கிறது. அவற்றை எப்படி நம்மால் நினைத்துப் பார்க்க முடியும்? நவீன இயற்பியல் இந்த முடிவை ஏனோதானோவென்று ஒரு கட்டுக்கதையாகச் சொல்லிவிடவில்லை. அனைத்தையும் கணித, இயற்பியல் சமன்பாடுகளுக்குள் உள்ளடக்கி, அறிவியல் ஆதாரச் சான்றுகளுடன், முழுமையான ஒரு கோட்பாடாகத்தான் சொல்கிறது. இந்த முடிவை உலகில் உள்ள எந்த ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் மறுத்ததில்லை. அனைவரும் இதைச் சரியென்றே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நவீன இயற்பியலின் இந்த ஆராய்ச்சிகளின் இறுதி முடிவாக சுப்பர் கிராவிட்டேசன் (Supergravitation) என்பதும் ஒரு பரிமாணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொத்தமாக 11 டைமென்சன்கள் (பரிமாணங்கள்) அண்டத்தில் உண்டு என்ற முடிவு தீர்மானமாக எடுக்கப்பட்டது. 

பூமியில் வாழும் மனித இனத்தால் இடம்வலம், மேல்கீழ், முன்பின் என்ற மூன்று பரிமாணங்களூடாக மட்டுமே தற்சமயம் பிரயாணம் செய்ய முடியும். ஆனால் ஐன்ஸ்டைனின் சார்புவேகக் கோட்பாட்டின்படி, நான்காவது பரிமாணமான நேரத்தினூடாகவும் மனிதனால் பிரயாணம் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்சமயம் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்ய முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியக் கூறுகளை இப்போதும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இது தாண்டி ஐந்திலிருந்து பதினோராவது பரிமாணங்களுக்குள் மனிதன் பிரயாணம் செய்ய முடியுமா? முடியாதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆனால் இன்னுமொன்றையும் சொல்கிறது இயற்பியல். அனைத்துப் பரிமாணங்களும் ஒரு நுண்ணிய தோல் போன்ற ஒன்றினால் பிரிக்கப்பட்டு மிக மிக அருகில் காணப்படுகின்றன. இந்த மெல்லிய நுண்ணிய தோல் போன்ற ஒன்றைத்தான் பிரான் (Brane)அல்லது மெம்பிரான் (Membrane) என்கிறார்கள். இந்த மெம்பிரான் என்பதிலிருந்துதான் M Theory என்பதில் உள்ள M தோன்றியதாகவும் சொல்வார்கள். 

பரிமாணங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன என்பதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. அதனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு புள்ளியை ஊடறுத்துச் செல்லும் முன்பின் நேர்கோடு ஒரு பரிமாணம் ஆகும். அந்த நேர்கோட்டில் முன்னும் பின்னுமாக மட்டும் ஒரு உயிரினம் இயங்கினால், அது ஒரு பரிமாணத்தில் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒரு பரிமாண நேர்கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் அளவிலாவது அந்த உயிரினம் நகர்ந்தால் அது இரண்டாம் பரிமாணம் என்றாகிவிடும். அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லிமீட்டருக்கு குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருக்கின்றன. இது உங்களுக்குப் புரிகின்றதா? அதாவது முதல் மூன்று பரிமாணங்களும் மிக மிக மெல்லிய கோடொன்றினால்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே நான்காவது பரிமாணமும், ஐந்தாவது பரிமாணமும் அப்படியே பதினோராவது பரிமாணமும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் காணப்படுகின்றன.

பரிமாணங்கள் பற்றி நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருந்தால், இந்தப் பரிமாணங்கள் சம்மந்தமாக இனி நான் சொல்லப் போவதுதான் நீங்கள் எதிர்பார்க்காத, ஆச்சரியமான தகவல்களாக இருக்கும். இந்தத் தகவல்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூடப் போகலாம். இப்போது நான் சொல்லப் போவதே இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு அடிப்படையாகவும் அமைந்தது. இனி விசயத்துக்கு வருகிறேன்.

மூன்று உயிரினங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒன்று முன்பின்னாக நகரும் ஒரு பரிமாணத்தில் மட்டும் வாழும் ஒரு உயிரினம். மற்றது முன்பின், இடம்வலம் என்று தட்டையான இடத்தில் நகரக் கூடிய இரண்டு பரிமாணத்தில் வாழும் ஒரு எறும்பு. மூன்றாவது முன்பின், இடம்வலம், மேல்கீழ் என அனைத்திலும் நகரக் கூடிய முப்பரிமாணத்தில் வாழும் ஒரு மனிதன். ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால், இடம்வலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எறும்பைக் காணவே முடியாது. எறும்பு இடம்வலமாக நகரும் போது, முன்பின்னாக நகரும் கோட்டை எப்போது வெட்டுகிறதோ, அப்போது மட்டும் அந்த உயிரினத்தால் அந்த எறும்பைக் காண முடியும். ஆனால் எறும்பினால் அந்த உயிரினத்தை எப்போதும் காண முடியும். இது போல, மூன்று பரிமாணத்தில் நகரக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணத்தில் நகரும் எறும்பையும், அந்த உயிரினத்தையும் எப்போதும் காண முடியும், அவை இரண்டினாலும் மனிதனை முழுமையாகக் காணவே முடியாது.

மேலே நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இப்பொழுது நான் சொல்லப் போவதைச் சிந்தித்துப் பாருங்கள். பூமியிலோ, அண்டத்திலோ மொத்தமாக 11 பரிமாணங்கள் உள்ளன என்று அறிவியல் சொல்கின்றது அல்லவா? அப்படி 11 பரிமாணங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த ஒவ்வொரு பரிமாணங்களிலும் ஏன் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது? இரு பரிமாணத்தில் இயங்கும் எறும்புக்கு கழுகு என்ற ஒரு பறவை இருக்கிறது என்று சொன்னால் அதனால் அதை நம்பவே முடியாது. காரணம் கழுகு மூன்றாவது பரிமாணத்திலேயே எப்போதும் பறந்து கொண்டிருப்பது. அதுவாக இரண்டாம் பரிமாணத்தில் நுழைந்தால் மட்டுமே அப்படி ஒன்று உண்டு என்பதை எறும்பு நம்பும் அல்லவா? அது போல, நாமும் நான்காவது ஐந்தாவது ஆறாவது என இப்டியே...... பதினோராவது பரிமாணங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று சொல்லும் போது, நம்பப் போவது இல்லை. அதிகம் ஏன் அதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆனால் கடந்து வந்த மனித வரலாற்றில், ஆவி போன்ற உருவங்களையும், பேய்கள் போன்ற உருவங்களையும், அரக்கர்கள் போன்ற உருவங்களையும், தேவர்கள் போன்ற உருவங்களையும், கடவுள் போன்ற உருவங்களையும் மனிதன் கண்டிருக்கிறான் என்று படித்திருக்கிறோம், அதை நம்புகிறோம். இவையெல்லாம் ஏன் கடவுளாகவும், பேய்களாகவும், அரக்கர்களாகவும் இல்லாமல் வெவ்வேறு டைமென்சன்களில் வாழும் உயிரினங்களாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு பரிமாணமும் அதிகரிக்க, அதில் வாழும் உயிரினத்தின் சக்தி அதிகமானதாக இருக்க வேண்டும் அல்லவா? ஒரு பரிமாணத்தில் வாழ்பவனை விட இரண்டு பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், அதைவிட மூன்றாவது பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், இப்படியே படிப்படியாக அதிகரித்து 11வது பரிமாணத்தில் வாழ்பவன் மிக அதியுயர் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் அல்லவா? அவனைத்தான் நாம் கடவுள் என்று சொல்கிறோமா?

கொஞ்சம் அமைதியாக இதை யோசனை செய்து பாருங்கள். கடவுள் என்றோ, தேவர்கள் என்றோ, அரக்கர்கள் என்றோ, பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ நாம் நினைக்கும் எவையும் நம் கதைகளில் வருபவை போலல்லாமல், ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழும் உயிரினங்களாக அவை ஏன் இருக்கக் கூடாது? இப்போது இதை நம் சமய இலக்கியங்கள் சொன்ன சில கருத்துகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலுலகம், கீழுலகம் என ஈரேழு உலகங்கள் உண்டெனவும், ஒவ்வொரு உலகங்களிலும் ஒவ்வொருவர் வாழ்வதாகவும் சொல்லியிருக்கிறதல்லவா? இந்த உலகங்கள் ஏன் ஒவ்வொரு டைமென்சனிலும் அமைந்தவையாக இருக்கக் கூடாது? மேல் பரிமாணங்களில் வாழ்பவர்கள் அப்பப்போ நாம் வாழும் மூன்றாவது பரிமாணத்திற்குள் நுழையும் போது, அவர்களைச் சிலர் கண்டு கொள்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆதிகாலத்தில் மனிதனுடன் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி தொடர்புகளையும் வைத்திருந்திருக்கலாம் அல்லவா? இவையெல்லாவற்றுக்கும் சான்றாக பண்டைய சமய இலக்கியங்களில் பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம். ஆதிகால மனிதனால் செய்திருக்கவே முடியாத சாத்தியமில்லாத பல விசயங்கள் நடைபெற்றிருப்பதற்கு நிறையச் சான்றுகள் இன்றும் நம் கண் முன்னே உள்ளன. அந்த ஆதி மனிதனுக்கு ஏதோ ஒரு மேல் பரிமாணத்தில் வாழும் ஒரு இனம் உதவியிருக்கலாம் அல்லவா? இப்படி நான் சொல்லும் போது, நீங்கள் முழுமையான ஆன்மீகவாதியாக இருந்தால் கோபப்படவே செய்வீர்கள். ஆனால் இந்தச் சாத்தியங்களை கோபம் என்ற உணர்வில்லாமல் அறிவியலாகச் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு முன்னால் இருக்கும் சகல பஸில் துண்டுகளும் (Puzzle) முறையாக அதனதன் இடத்தில் தானாகப் பொருந்துவதைக் காண்பீர்கள். 

இத்துடன் இது முடிந்துவிடவில்லை. நவீன இயற்பியல் பல பரிமாணங்கள் உள்ளது போல, பல அண்டங்களும் உள்ளன என்று நம்புகிறது. அதாவது இதுவரை ஒரே அண்டம் இருக்கிறது என்றுதான் நம்பியிருந்தோம். அதனால்தான் அண்டத்திற்கு 'Uni'verse என்றே பெயரிட்டிருந்தோம். ஆனால் இப்போது இருப்பது யூனிவேர்ஸ் அல்ல மல்டிவேர்ஸ் (Multiverse) என்கிறது நவீன இயற்பியல். மல்டிவேர்ஸ் என்று சொல்லும் போது, பத்து அண்டம், நூறு அண்டம் அல்ல, ஒரு சமுத்திரத்தில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இதையெல்லாம் சிந்தித்தால் நாம் பைத்தியமாகிப் போகும் நிலைதான் உருவாகும்.

நவீன இயற்பியலால் குறிப்பாகச் சொல்லப்பட்ட இன்னுமொரு விசயமும் உண்டு. அதுதான் 'பாரலல் யூனிவேர்ஸ்' (Parallel Universe) என்பது. உலகில் உள்ள அனைத்துக்கும் சமனானதும், நேரெதிரானதுமான இன்னுமொன்று இருந்தே தீரும் என்கிறது அறிவியல். பூமி சமநிலையில் இருப்பதற்கு இந்த இரட்டைச் சமர்ச்சீர்த்தன்மை மிகவும் அவசியமானது. மனிதனை எடுத்துக் கொண்டாலே வலது இடது என இரண்டு சமபகுதிகளாகவும், நேரெதிராகவும் சமச்சீராகப் பிரிக்கப்பட்டு இருப்பான். நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். இரவு பகல், ஆண் பெண், கடவுள் சாத்தான், நீர் நெருப்பு, கிருஸ்து ஆன்டி கிருஸ்து, சொர்க்கம் நரகம், குளிர் வெப்பம் என்று எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். இது போல, அண்டத்தில் மாட்டர் (Matter) நிறைந்திருக்க, அதற்கு எதிரான ஆன்டி மாட்டர்களும் (Antimatter) நிறைந்திருக்கின்றன. அணுக்களானாலென்ன, அண்டமானாலென்ன அனைத்துமே சமச்சீராகத்தான் (Symmetry) இருக்கின்றன. இதனால்தான் விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உப அணுத்துகள்களுக்கும் (Subatomic particle) சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு உப அணுத்துகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நமது அண்டத்துக்குச் சமச்சீராகவும், எதிரானதுமான ஒரு அண்டம், நமது அண்டத்துக்குச் சமாந்தரமாகவே இருக்கிறது என்று அறிவியல் வல்லுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அதைத்தான் சமாந்தர அண்டம் (Parallel Universe) என்று பெயரிட்டும் அழைக்கிறார்கள். இந்தச் சமாந்தர அண்டம், நமது அண்டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போல இருக்கிறது. நான், நீங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என எல்லாரும், இங்கிருப்பது போல அங்குமிருப்போம். ஆனால் எல்லாமே எதிரெதிராக. இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங்கள் அங்கு நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். உங்கள் நெருங்கிய உறவினர்கள் யாராவது இறந்திருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அவர்கள் உங்களுக்கு மிக அருகிலேயே பாரலலாக உள்ள அண்டத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

'என்ன இது, அறிவியல் இப்படியெல்லாம் மூடத்தனமாக பேசுகிறதே!' என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். இதில் சொல்லப்பட்ட எதையும் அறிவியல் தகுந்த காரணம் இல்லாமல் சொல்லிவிடவில்லை. இதில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிவியல் அறிஞர்கள் அனைவரும் தீர்மானமாக ஏற்றிருக்கிறார்கள். பல விசயங்களை முடிவான முடிவாக அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்கு நமது விஞ்ஞானக் கருவிகள் இன்னும் வளரவில்லை. எப்போது அந்த வளர்ச்சிகள் ஏற்படுமோ அப்போது இவை எல்லாம் நம் கண் முன்னே சாத்தியமாகலாம். அதுவரை இவை அறிவியல் கோட்பாடுகளாக நம்மிடையே இருந்து கொண்டே இருக்கும். 

-ராஜ்சிவா-

Saturday, September 21, 2013

நல்லோர் பற்றி அறிவதும் நன்றே...


பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது
...
மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Sunday, August 11, 2013

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை....

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

நன்றி : அமுதா சுரேஷ்

Saturday, August 10, 2013

தமிழின் தசம கணக்கீடுகள்....

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

மூளையின் திறனை மேம்படுத்திட....

13 steps to improve your Memory...

1. Organize your life
2. Exercise your brain (puzzles etc.)
3. Exercise daily (walk for 30min)
4. Redice stress & take naps
5. Eat well & eat right (fruit, veggies, fish)
6. Sleep well (also nap in afternoon)
7. Give yourself time to form a memory
8. Memorize in parts not a whole
9. Categorize information; dont be random
10. Continually repeat what you've memorized
11. Participate in group discussions
12. Build your memorization techniques
13. Venture out and learn from your mistakes

வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்

Home remedies for Varicose Veins~

In our body there is a huge network of veins, which carry blood from one part of the body to the other part. When some injury happens to even a single vein, the blood flow gets affected. This can further lead to several diseases. Many times the veins get congested due to the blood clots and this can also result in various illnesses. Due to the injury the veins appear bluish and swollen. This condition is known as varicose veins. This is extremely painful condition but you can get some relief from the pain by trying the various home remedies for varicose veins.

Home remedies for Varicose Veins:

1. In order to keep the blood circulation well within your body, exercising is the only option. Walking, jogging, cycling and swimming are some of the best form of exercising. Even if you perform some sort of exercising for about 30 to 45 minutes a day that will be sufficient to keep your body healthy and fit.
2. Follow healthy eating habits and stay away form junk food, oily food. Limit your intake of sugar and salt. Try to minimize eating ice creams, cheese, tobacco and peanuts.
3. Your diet should consist of vegetables, fruits, seeds, nuts, whole grains, fish and Soya products. Onion, ginger and garlic are also effective for proper blood circulation in the body. Include them while cooking food.
4. Pineapple is also very effective in the treatment of varicose veins. Pineapple juice should be consumed once a day in case you get varicose veins often.
5. Blackberries and cherries are also effective in preventing varicose veins from occurring.
6. Eat fibrous food, as this will keep the bowels clean. This will prevent varicose veins from occurring and will also keep you away from various other conditions.
7. To keep the blood circulation proper avoid sitting or standing in one position for long time. Take break for five minutes in case your work wants you to sit in one position for too long. This will ensure that all the body parts get proper blood supply. Thus there will no pressure on the veins. This is one of the very effective home remedies for varicose veins.
8. Don’t wear tight clothes. Your body should feel comfortable in what you are wearing.
9. In case you have to stand for long time while working then balance your weight equally on both the legs. Don’t put extra pressure on one leg.
10. Rest is also important part of the day. Take rest whenever possible. Daily sleep of six to seven hours is a must for all of us.
11. Applying castor oil over the swollen veins will reduce the swelling and heal the varicose veins fast.
12. Mix carrot juice and spinach juice and drink it. This will also give relief form varicose veins.
13. Massage the swollen veins with rosemary oil, as this will give relief from the pain.
14. Applying apple cider vinegar over the veins will also give relief from varicose veins.

-அருணா செல்வம்- : கலைவாணர் சொன்ன “மை“ கள்!

-அருணா செல்வம்- : கலைவாணர் சொன்ன “மை“ கள்!:                               ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.     “தற்போதைய எழுத்த...

Tuesday, August 6, 2013

தெரிந்து கொள்வோமா-164 [உங்களின் உலா பேசி எண்ணைத் திரையில் காண வேண்டுமா]

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#


நன்றி - அறிந்துகொள்வோம்

தோல்வியைக் கண்டு துவண்டவரா நீங்கள்?????

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்

Monday, August 5, 2013

தெரிந்து கொள்வோமா-163 [வெட்டுவான் கோயில்]



7th-8th century Vettuvan Koil temple, Tamilnadu, India.

This little known rock cut temple was carved out of single piece of granite stone.Even today when we have diamond tipped cutting tools it’s a difficult task to carve granite. It's an example of incredible engineering from more than 1300 years ago, and the detail still baffles scholars today.

Sunday, August 4, 2013

தெரிந்து கொள்வோமா-162 [மனித உடல்]

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

Thursday, August 1, 2013

காற்றினை சுத்திகரித்திடும், வீட்டில் வளர்க்கப்படும் 6 செடிகள்...

Natural 6 Air Purifying House Plants

1. Bamboo Palm: According to NASA, it removes formaldahyde and is also said to act as a natural humidifier.

2. Snake Plant: Found by NASA to absorb nitrogen oxides and formaldahyde.

3. Areca Palm: One of the best air purifying plants for general air cleanliness.

4. Spider Plant: Great indoor plant for removing carbon monoxide and other toxins or impurities. Spider plants are one of three plants NASA deems best at removing formaldahyde from the air.

5. Peace Lily: Peace lilies could be called the “clean-all.” They’re often placed in bathrooms or laundry rooms because they’re known for removing mold spores. Also know to remove formaldahyde and trichloroethylene.

6. Gerbera Daisy: Not only do these gorgeous flowers remove benzene from the air, they’re known to improve sleep by absorbing carbon dioxide and giving off more oxygen over night.

தெரிந்து கொள்வோமா-161 [பன்னாட்டு அமைப்புகளும்,அதன் தலைமையிடமும்]

தெரிந்து வைத்துக் கொள்ளுவோம்..
............................................................

பன்னாட்டு அமைப்புகளும்,அதன் தலைமையிடமும்..
...........................................................................................

*ஐ.நா.சபை தலைமையகம் : நியூயார்க்

*ஐ.நா.பொதுச்சபை : நியூயார்க்

*பன்னாட்டு நீதிமன்றம் : தி ஹேக்

*ஐ.நா.வளர்ச்சி திட்டம் : நியூயார்க்

*யுனேஷ்கோ (UNESCO) : பாரிஸ்

*யூனிசெப் (UNICEF) : நியூயார்க்

*ஐ.நா.சுற்றுச்சுழல் திட்டம் (UNEP) : நைரேபி

*உணவு மற்றும் விவசாய நிறுவனம் : ரோம்

*உலக வர்த்தக நிறுவனம் (WHO) : ஜெனிவா

*உலக சுகாதார நிறுவனம் ( WHO) : ஜெனிவா

*பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் (ILO) : ஜெனிவா

*உலக வங்கி (WORLD BANK) : வாஷிங்டன்

*பன்னாட்டு நிதி அமைப்பு (I.M.F.) : வாஷிங்டன்

*பன்னாட்டு அணுசக்தி கழகம்(IAEA) : வியன்னா

*பன்னாட்டு கடல் நிறுவனம் : லண்டன்

*ஐ.நா.தொழில் வளர்ச்சி திட்டம் : வியன்னா

*ஆசியான் (ASEAN) : ஜாகர்த்தா

*ஆசிய வளர்ச்சி வங்கி : மணிலா

*சார்க் : காத்மண்டு

*செஞ்சிலுவை சங்கம் : ஜெனிவா

*ஐரோப்பிய கழகம் (EC) : புருசெல்ஸ்

*நோட்டோ (NATO) : புருசெல்ஸ்

*ஐ.நா.வின் தற்போதைய உறுப்பு நாடுகள் : 193

*ஐ.நா. உறுப்பு நாடுகளில் மன்னராட்சி நாடுகள் : 28

நன்றி-உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
இன்று ஒரு தகவல்..

Wednesday, July 31, 2013

தெரிந்து கொள்வோமா-160 [ஜப்பானின் அதி நவீன மிதிவண்டி காப்பகம்...]







ஜப்பான் நாட்டின இந்த அதி நவீன தொழில் நுட்பத்தை விரைவில் உலகம் பின்பற்ற உள்ளது. ஜப்பானியர்கள் தங்கள் தாய் மொழியில் தான் இன்னமும் கல்வி கற்கின்றனர். அதனால் தான் அவர்களால் இந்த அளவிற்கு அறிவியலில் முன்னேற முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டிலோ தாய் மொழி கல்விக்கு மதிப்பு இல்லை. தமிழக அரசு தமிழ் வழிக் கல்வியை நிரந்தரமாக மூடுவதற்கான வேலைகளை பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிந்து கொள்வோமா-159 [மதுரை....]

"The World's only living civilization" via இளஞ் சித்திரன்

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Tuesday, July 30, 2013

விவசாய புரட்சி-நாகரத்தினம் நாயிடு

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்... ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது... காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...

நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்... நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க... நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்... இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு (http://www.srinaidu.com/profile.htm)... அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள் தமிழிலேயே பேசுவார்.

PROFILE
Sri Gudiwada Nagarathanam Naidu
58 Years
Chittoor Dt (Andhra Pradesh)
8-66 Gowtham Nagar Colony, Dilsukhnagar. Hyderabad
09440424463
04024063963
Farm Address
Taramathipeta VI, Hyathnagar Mandal, Rangareddy dist.

Monday, July 29, 2013

சிறுநீரக சுத்தி....






CLEAN YOUR KIDNEYS

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?

It is very easy, first take a bunch of parsley or Cilantro ( Coriander Leaves ) and wash it clean
Then cut it in small pieces and put it in a pot and pour clean water( enough to cover it) and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.

Parsley (Cilantro) is known as best cleaning treatment for kidneys and it is natural!

Sunday, July 21, 2013

உண்மைத் தமிழர்களில் ஒருவர்...

இவருக்கும் தமிழ் என்று பேர்! - தமிழால் வாழ்கையை தொலைத்த ‘ஜிப்மர் டாக்டர்’ புதுவை அரிமா மகிழ்கோ 

************************************************
தமிழ் மொழியை மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் பலர் உண்டு. ஆனால், தமிழால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். புதுவையைச் சேர்ந்த ஆனந்தராஜ் மட்டும் விதிவிலக்கு.

பலருக்கு கனவுக் கல்லூரியான ஜிப்மர் மருத்துவமனையில் படித்து, பின் 20 வருடங்கள் மருத்துவராகப் பணி புரிந்து, பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆனந்தராஜ். 'நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு களைத் தமிழில் எழுதிக்கொடுத்தார்’ என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. தற்போது 62 வயதாகும் ஆனந்தராஜ், தமிழ் அறிஞர் களின் வீடுகளுக்குச் சென்று 'வெல்லும் தமிழ் நாடு’ என்ற தலைப்பில் ஒரு பக்க அளவிலான கையெழுத்துப்பிரதியை அளிக்கிறார். அவர்கள் அளிக்கும் ஐந்து ரூபாய் நன்கொடையை அவ்வளவு உவகையுடன் வாங்கிச் செல்கிறார்.தன் பெயரை அரிமா மகிழ்கோ என மாற்றிக்கொண்டார்..

''உருளையன்பேட்டைதான் இவரது சொந்த ஊர்..
இவரது அப்பா கிருஷ்ணன், கவர்னர்கிட்ட மொழி பெயர்ப்பாளரா இருந்தார். சின்ன வயசுல இருந்து தமிழ் மொழி மேல அதிகமான ஈடுபாடு. பள்ளிப் படிப்பு முடிஞ்ச உடனே ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதி மாநிலத்திலேயே இரண்டாவது இடம் ... கல்லூரி நான்காம் ஆண்டில் கல்லூரி ஆண்டுமலர் தயாரிக்கும் வேலை வந்தது. பாதி ஆங்கிலக் கட்டுரைகள், பாதி தமிழ்க் கட்டுரைகள் நிரம்பியதாக அந்த ஆண்டுமலரைத் தயாரித்தார்.
ஆனால், ஆண்டுமலர் வெளியானபோது, அந்தக் தமிழ்க் கட்டுரைகள் மட்டும் வரவேயில்லை.

படிப்பு முடிந்த பிறகு 1980-ல் கூடப்பாக்கம் பகுதிக்கு மருத்துவரா நியமிக்கப்பட்டு, அங்கே 10 ஆண்டுகள், காரைக்காலில் 3 ஆண்டுகள், மாகே-வுல சில ஆண்டுகள்னு மொத்தமா 19 வருஷம் மருத்துவர் வேலை ... மருத்துவரா இருந்தபோது தமிழில்தான் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பார்..! இந்த ஒரு விஷயத்துக்காகவே வேலையை விட்டு தூக்கினார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சாதகமா தீர்ப்பும் வந்தது. ஆனா, அதுக்குள்ள 60 வயசு ஆயிடிச்சு.

“இந்தியாவில் ஆங்கிலத்தையும் சரியா கற்றுத்தருவது இல்லை... தமிழையும் கற்றுத் தருவது இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்து காலம்தான் விரயம் ஆச்சு. திருமணமும் பண்ணிக்கலை. இப்ப அடுத்த கட்டமா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க முடிவுசெய்து, அதற்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். தமிழர் கள் தாய் மொழியில் மருத்துவம் படிக்கணும். அதுதான் என் நோக்கமே'' என்று கண்களில் கனவு தேங்கப் பேசுகிறார் ஆனந்தராஜ். 

அது தமிழ்க் கனவு!
ஆனால், ஆனந்தராஜின் 79 வயதான தாய் கஸ்தூரியோ தன் மகன் நல்ல படிப்பு படித்திருந்தும் நல்ல நிலைக்கு வர முடிய வில்லையே,திருமணம் செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் அழுகிறார்.
'மெள்ளத் தமிழினிச் சாகும்’ என்றான் பாரதி. ஆனந்தராஜ் போன்றவர்களால்தான் தமிழ் அழியாமல் வாழ்கிறது போலும்...!

தெரிந்து கொள்வோமா-158 [கார்ட்டர் பாம்புகள்]

Garter Snake
One of the most commonly known snakes in Canada is the garter snake. They can be found anywhere in Canada and central United States and come in quite a few different colors and markings. Garter snakes are usually about 60 to 80 cm (23-30 inches) long, but they have been known to grow up to 135 cm.

Because Garter snakes live in colder temperatures they need to hibernate in winter. They will find shelter in cracks in the ground where the frost doesn’t reach. If you go searching for them you won’t find just one…there could be hundreds! Some snakes will travel as far as 32 km or 20 miles to reach their winter den in Manitoba, Canada. It is one of the largest ‘Garter’ gatherings in the world!

தெரிந்து கொள்வோமா-157 [குப்பை மருந்துகள்]

"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி "

இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் 
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் 
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து 
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் 
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் 
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு - நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா
1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol

இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.


மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்கவிளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.
ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துவிற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி,தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரின்தந்தையிடம் 200 கோடி கொடுத்தன ஒரு ஆறு மாதம் விற்பனை செய்தசம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானாஇருக்கிறானா என்று தெரியவில்லை.

மைலாஞ்சி ( Mylanchi )