Friday, February 20, 2015

இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …



இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …

“ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது…. அது எப்ப அப்பா தூங்கும்?”

“அது தூக்கம் வரும்போது தூங்கும்…”

“கொசுக்கு வீடு எங்கேப்பா?”

“அதுக்கு வீடே இல்லை…”

“ஏம்பா வீடே இல்லை?”

“அது ரொம்பச் சின்னதா இருக்கே… அதான் வீடு இல்ல…”

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே… எனக்கு வீடு இருக்கே.”

“இது அப்பா உனக்கு கட்டித் தந்தது.”

“அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?”

“அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல..”

“கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?”

“கடவுள்.”

“கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?”

“கடிக்காது.”

“ஏம்பா கடிக்காது?”

“கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்.”

“கடவுள் நல்லவராப்பா?”

“ரொம்ப நல்லவர்.”

“அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?”

“அது அப்படித்தான். நீ தூங்கு.”

“கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?”

“அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்.”

“ஒரே ஒரு கேள்விப்பா? “

“கேட்டுத் தொலை…”

“கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?”

“அதுக்குப் பல்லே இல்லை…”

“பிறகு எப்படிக் கடிக்கும்?”

“அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்.”

“பேயைக் கொசு கடிக்குமாப்பா?”

‘இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?”

“நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?”

No comments: