Friday, December 7, 2012

பிரபஞ்சம் உருவாக காரணமான ‘ஹிக்ஸ் போசான்’
‘கடவுளின் அணுத் துகள்’ கண்டுபிடிப்பு


ஜெனீவா: பிரபஞ்சத்தை படைத்தது யார்... என்ற கேள்விக்கு துகளை பதிலாக நேற்று காட்டியுள்ளனர் இயற்பியல் விஞ்ஞானிகள். அந்த துகள் பெயர் ஹிக்ஸ் போசான். இப்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட கதை தொடங்கியது 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன். அதை பிக் பேங் என்கிறார்கள். பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதறியதில்தான் நாம் இருக
்கும் பூமி உட்பட நட்சத்திரங்கள், கோள்கள் வளி மண்டலத்தில் நிலை கொண்டன என்பது அந்த தியரி.

பிக் பேங் வெடிப்பு நடந்த விநாடியில் ஒலியை விட அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் அணுக்கள் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (னீணீss) இல்லை. ஆனால், ஹிக்ஸ் போசன் எனப்படும் சக்தியோடு அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு மாஸ் கிடைத்தது. இதுதான் பேரண்டம் உருவான கதை.
பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

ஆனால், இதுவரை விஞ்ஞானிகளுக்கு புரிபடாத விஷயமாக இருந்தது ஹிக்ஸ் போசான். அதை சுவிட்சர்லாந்தின் செர்ன் (ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்) ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேற்று சாதித்து காட்டினர். கடவுளின் அணுத் துகள் என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக நேற்று அறிவித்தனர்.
அதுபற்றி செர்ன் இயக்குனர் ஹுயர் கூறுகையில், ‘‘இயற்கையை புரிந்து கொள்வதில் இது புதிய மைல்கல். இந்த துகள் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் பிறந்த கதை சூடுபிடித்துள்ளது. இனி அது தோன்றிய விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். காம்பேக்ட் மியூன் சோலனாய்ட் என்ற அணுமின் பேரியக்க மோதலில் இதை கண்டுபிடித்தோம்’’ என்றார்.

எப்படி வந்தது: அணுத் துகள்களில் 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் அளவை கொண்ட துகளே ஹிக்ஸ் போசான் என்றும், அதுவே இந்த பேரண்டம் உருவாக மூலக்காரணம் என்றும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதை தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போசானை கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.

எனினும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 27 கி.மீ. ஆழத்தில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்தனர். கண்ணாலும், மைக்ராஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் எடையைக் கண்டுபிடிப்பது அது. இந்த ஆய்வைத் தான் செர்ன் நடத்தியது. சிறிய Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்தி பார்த்தது. ஜெனீவா அருகே உள்ள ஆய்வகத்தில் 40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர மோதலை நடத்தினர்.

அதில் வெடித்துச் சிதறிய அணுத் துணை துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போசானையும் (அதன் எடையை) தேடினர். தேடலுக்கு நேற்று விடை கிடைத்தது. ஹிக்ஸ் போசனின் எடை 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருந்தது. அதன் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்டுக்கு மிக அருகில் இருந்ததால் அதுவே கடவுளின் அணுத் துகள் என்றும், 99.999 சதவீத ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தனர். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை.

ஹிக்ஸ் போசானில் இந்தியர்

ஜெனீவாவில் நேற்று அறிவிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கொல்கத்தாவின் சாஹா அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சி மையம், மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், அலகாபாத்தின் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரின் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்தனர்.

செர்ன் மைய செய்தி தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்தியர்களை நேற்று பாராட்டினார். ‘‘இந்த ஆராய்ச்சி திட்டத்தின் வரலாற்று தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது’’ என்றார்.
கொல்கத்தாவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஈன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணு துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது நினைவாக ஹிக்ஸ் போசானில் அவரது போஸ் என்ற சொல்லும் இணைந்துள்ளது.

செயற்கை பிரளயம்

உலகம் அழிவதை புராணங்கள் பிரளயம் என்கின்றன. சினிமாவில் பார்த்திருக்கலாம். 1,370 கோடி ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிக் பேங் மோதல்தான் அது. அதில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவிக் குளிர, அதில் தோன்றிய வாயுக்கள் சுருங்கி அடுத்த 500 ஆண்டுகளில் மாற்றம் பெற்றன. பின்னர் கொத்துக் கொத்தாக வாயுக்கள் திரண்டு பிரபஞ்சம் முழுக்கப் பால்வீதிகளாக மாறின.

காலப்போக்கில் பால்வீதிகள் விரிந்து பரவ, மேலும் சில நூறு ஆண்டுக்கு பிறகு பால்வீதிகளில் நட்சத்திரங்களும், கிரகங்களும் தோன்றியதாகவும், நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என்று உண்டு என்றும் விஞ்ஞானம் சொல்கிறது. இதேபோல செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனிதனின் முயற்சியாக இப்போது கடவுளின் அணுத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments: