Monday, November 30, 2015

சிரிக்க மட்டும்.....

கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான்,

என் அருமை மனைவிக்கு

உன் அன்பு கணவன் எழுதும் மடல்

இங்கு நான் நல்ல சுகம்,  அதுபோல்

உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,

கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,

அன்புள்ள !

கணவருக்கு உங்கள் மனைவி எழுதிக்கொள்ளும் மடல், இங்கு நான் சுகம் அங்கு நீங்கள் சுகமா,  நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது அதில், 100 முத்தங்கள் இருந்தது பெற்றுக்கொண்டேன்.

அந்த முத்தங்களை எவ்வாறு செலவழித்தேன் என்று செலவு கணக்கு எழுதியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்,

1, பால் காரன் வந்து ஒரு மாதம் பால் பாக்கி கேட்டான் அவனுக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்தேன்,

2,வீட்டு வாடகை கேட்டு  வீட்டு உரிமையாளர் வருவார் அவர் வரும்போதெல்லாம், இரண்டு மூன்று முத்தங்கள் கொடுத்தேன்

3,மளிகை கடைகாரருக்கு பத்து முத்தங்கள் கொடுத்தேன் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை அவருக்கு கூடுதல் முத்தம் கொடுக்கவேண்டியதாக ஆயிற்று

4, சிலிண்டர் கடைகாரனுக்க ஏழு முத்தம் கொடுத்தேன்

மற்றும்

இதரசெலவுகளுக்கு இருபத்தி ஆறு முத்தம்  செலவழித்துவிட்டேன்,  நீங்கள் ஒன்னும் கவலை பட வேண்டாம் மீதம் 25 முத்தங்கள் உள்ளது இந்த மாதம் முழுவதும் நான் சமளித்துகொள்கிறேன்

ஆனால் நீங்கள் அடுத்தமாதம் பணம் அனுப்பவில்லை என்றால் கொஞ்சம் கூடுதலாக முத்தங்கள் அனுப்பவும்...

இப்படிக்கு

உங்கள் அன்பு

மனைவி

No comments: