Sunday, August 9, 2015

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

, ஒரு விவசாயி👳 வளர்த்து வந்த
வயதான பொதி சுமக்கும்
கழுதை 🐴 ஒன்று தவறி அவன்
தோட்டத்தில் உள்ள வறண்ட
கிணற்றில்
விழுந்துவிடுகிறது😔

உள்ளே விழுந்த கழுதை
அலறிக்கொண்டே இருந்தது🐴 😮  அதை எப்படி
கிணற்றிலிருந்து
வெளியேற்றி
காப்பாற்றுவது என்று
அவன் விடிய விடிய
யோசித்தும்🙇 ஒரு யோசனையும்
புலப்படவில்லை😔.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு
பிடிக்ககூடியதாக இருந்தது😳❗
.
அந்த கிணறு எப்படியும்
மூடப்படவேண்டிய ஒன்று.
தவிர அது மிகவும் வயதான
கழுதை என்பதால் அதை
காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன்😥, கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று
முடிவு செய்தான்😨.
அக்கம் பக்கத்தினரை
உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்👲👳👮👷👦👧👨👩👴👵. சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை
மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்😓.

கழுதை நடப்பதை உணர்ந்து
தற்போது மரண பயத்தில்
அலறியது😩😫.

ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை 😱
இவர்கள்
தொடர்ந்து மண்ணை அள்ளி
அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம்
கழித்து அதன் அலறல் சத்தம்
அடங்கிவிட்டது🐴 😷.

ஒரு பத்து நிமிடம் மண்ணை
அள்ளி கொட்டியவுடன்
கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க,
அவன் பார்த்த காட்சி அவனை
வியப்பிலாழ்த்தியது😳❗❗.

ஒவ்வொரு முறையும்
மண்ணை கொட்டும்போது,
கழுதை🐴 தனது உடலை ஒரு
முறை உதறிவிட்டு,
மண்ணை கீழே தள்ளி,
அந்த
மண்ணின் மீதே நின்று வந்தது🐴 😊
இப்படியே பல அடிகள் அது மேலே
வந்திருந்தது❗❗

இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை🐴 🙌 தனது முயற்சியை கைவிடாது,
உடலை உதறி உதறி மண்ணை
கீழே தள்ளி தள்ளி அதன் மீது
ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத
இந்த முயற்சியால்
அனைவரும் வியக்கும்
வண்ணம் ஒரு வழியாக
கிணற்றின் விளிம்பிற்கே
வந்துவிட்டது❗❗🙇
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி
தோட்டத்திற்குள் சென்று
மறைந்தது🙇😊.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்
இப்படித் தான் நம்மை
படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும்,
மண்ணையும் நம் மீது
கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும் இந்த உலகம் 🌍❗

ஆனால் நாம் தான்
இந்த கழுதை🐴 😊 போல
தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கொண்டு, அவற்றை உதறித்
தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும்
ஒவ்வொரு கல்லையும்
சாமர்த்தியமாக பிடித்து
படிக்கற்க்களாக்கிக்
கொள்ளவேண்டும்,
எத்தனை பெரிய குழியில்
நீங்கள் விழுந்தாலும்..🙌🙌

நன்றி இல்லாத, நண்பர்கள்👬, குடும்பத்தார் 👪,பணியிடத்தின் முதலாளி💂, இப்படியாக எல்லாராலும் ஒதுக்கபட்டு, உங்களை அழிக்க நினைத்தாலும் 👆👀❗❓

“இத்தோடு நம் கதை
முடிந்தது” என்று
கருதாமல் விடாமுயற்சி
என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். “நீங்கள் எதுக்குள்ளே
விழுந்தா என்ன❗, உங்க மேல
எது விழுந்தா என்ன❓
எல்லாத்தையும் உதறிட்டு,
நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..😊☺

No comments: