Monday, April 8, 2013

தெரிந்து கொள்வோமா-86 [எடைக்கேற்ப விமான பயணக்கட்டணம்...]


ஆள் எடை அதிகமானால் பயணக் கட்டணம் அதிகமாகும்: ஆஸ்திரேலிய விமானம் அதிரடி!


இதுவரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பயணிகளின் எடைக்கு தகுந்தாற்போல் புதிய விமான கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள சமோவா விமான நிறுவனம் இந்த திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்தால் பயணிகளின் எடைக்கு தகுந்தபடியே விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண தூரத்தை பொறுத்து 1 கிலோ எடைக்கு 1 டாலர் முதல் 4.16 டாலர் வரை விமான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 fat-airline_
ஆன்லைன் மூலம் இந்த நிறுவனத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் பயணிகள் எடை கேட்கப் பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்தால் அந்த எடைக்கு ஏற்ப விமான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்.விமானத்தில் ஏறும் முன்பு பயணிகளின் எடை சரிதானா என்று சரிபார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிறுவன செயல்பாட்டு நிர்வாக அதிகாரி கிரிஷ்லாங்டன் கூறுகையில், ”நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை சிறுவர்களுடன் குடும்பமாக வந்து பயணம் செய்பவர்களுக்கு மிகவும் வசதியானது.ஏற்கனவே சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி சிறுவர்களுக்கு எடையின் அடிப்படையில் தானாகவே கட்டணம் குறைந்து விடும். இதனால் அவர்களின் பணமும் மிச்சப்படுத்தப்படும்.
எனவே பயணத்துக்கு இதுதான் சரியான வழி. இந்த எடைமுறை எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த நடைமுறை மூலம் குண்டாக இருப்பவர்கள் கூடுதல் கட்டணமும், ஒல்லியமாக இருப்பவர்கள் குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டியதிருக்கும்” என்றார்.
Samoa Air To Price Tickets By Passenger Weight!
***************************************************
A tiny Samoa airline is offering a new reason to drop extra weight before your next trip: Tickets sold not by the seat, but by kilogram.Samoa Air planned on Wednesday to start pricing its first international flights based on the weight of its passengers and their bags. Depending on the flight, each kilogram (2.2 pounds) costs 93 cents to $1.06.
That means the average American man weighing 195 pounds with a 35 pound bag would pay $97 to go one-way between Apia, Samoa, and Pago Pago, American Samoa. Competitors typically charge $130 to $140 roundtrip for similar routes.
நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்...

தெரிந்து கொள்வோமா-85 [பயனுள்ள தகவல்கள்...]

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே


8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471


10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

பொது அறிவிற்கென விரிவாக்கங்கள்...

தாயைச் சிறந்த கோவிலுமில்லை... தாய் மொழியைச் சிறந்த ஆசிரியரும் இல்லை....




தமிழக பெற்றோர்கள் கவனத்திற்கு. சீனத்து சிறுமியின் மழலைத் தமிழ் ! 
மெத்த படித்த தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழில் பேசுவதையே விரும்புவதில்லை . இந்த சீனத்து குழந்தையை பாருங்கள் . எவ்வளவு அழகாக தமிழ் மொழியை புரிந்து வரிக்கு வரி அதற்கான பாவனை செய்தும் காட்டுகிறாள். இதை பார்த்த பின்பாவது அன்னைத் தமிழை நம் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தருவோம் தமிழர்களே .


பி(எ)ன் குறிப்பு:நிறைய மொழிகள் கற்பது அனுகூலமான, அவசியமான விடயமே...

அத்தனை மொழி கற்றாலும், எம்மொழியினனானாலும், தாய் மொழிதனை ஏற்றி போற்றுவதுடன் தாய் மொழியினை பின்பற்றுவதே சரியானதாகும்...

ஆனால், நமது இரத்தங்களின் தற்போதைய செயலானது, பெருமைக்காக ஆட்டை அடித்து ஊருக்கு விருந்து வைத்து, தம் பிள்ளைக்கு ஆட்டின் புழுக்கையினை அளித்ததுபோல் உள்ளது...

Sunday, April 7, 2013

தெரிந்து கொள்வோமா-84 [உள்ளாடைகளில் GPS-இதன் மூலம் பாலியல் குற்றங்கள் பற்றி பெற்றோர்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிப்பது]


Three automobile engineers from Chennai have come out with what they claim can check sexual offences in India -- a lingerie laced with modules of GPS and capable of sending alerts to the girl's parents and police.

நன்றி: http://iexp.in/AQf13757

அருமையான கண்டுபிடிப்பாக அமைய வேண்டுமென்பதே எனது வேண்டுதல்...

தெரிந்து கொள்வோமா-83 [கரியமில வாயு வெளிப்படித்தாத அனல் மின் நிலையம்..]


The World's Largest Thermal Solar Plant
➤ Location : Mojave Desert, California
➤ Capacity : 377 Megawatts (MW)
➤ It will power 140,000 houses.
➤ Completion Date : 2014
➤ Cost : $1.6 Billion
Over 300,000 software-controlled mirrors will track the sun and reflect the sunlight to boilers that sit atop three 459 foot tall towers. This heat is then turned into steam that goes through turbines to generate electricity. It will prevent the emission of
over 350,000 metric tons of CO2 a year.

தெரிந்து கொள்வோமா-82 [கண்களின் பாதுகாப்பிற்கு...]

கண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்!!


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.


16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.