Saturday, February 21, 2015

ஏழரை சனி வந்தால் துன்பம் நேருமா...

கேள்வி:
சத்குரு, ஏழரை சனி வந்தால் துன்பம் நேரும் என்று கூறுகிறார்களே, அந்தப் பரிகாரம் செய்யுங்கள், இந்தப் பாடலை ஒன்பது தடவை உச்சரியுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன? சத்குரு: இங்கு எவ்வளவு பேருக்கு ஏழரை சனி இருக்கிறது? (பலர் கை உயர்த்துகிறார்கள்) இவர்கள் எல்லாம் ஆனந்தமாக நன்றாகவே இருக்கிறார்களே! வாராவாரம் சனி வந்தால் நல்லதுதானே? ஏனென்றால்… அடுத்த நாள் ஞாயிறு! நமக்கு மற்ற கிரகங்கள் பற்றி அதிக கவனம் வந்துவிட்டது. நீங்கள் வாழும் இந்த கிரகத்தைப் பற்றி கவனமே இல்லை. நமது உயிருக்கு அடிப்படையாக இருப்பது இந்த கிரகம். நமது உடல் இந்த கிரகத்திலிருந்து தானே வந்திருக்கிறது? இந்த பூமியிலிருந்துதானே இந்த உடல் வந்திருக்கின்றது? மண்தானே இது? ஆனால் இது பற்றி நமது கவனமில்லை. எங்கேயோ இருக்கும் சனி கிரகம் பற்றி கவனம் வந்துவிட்டது. ஏமாற்றிய ஜோசியர்… கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? ஒரு முறை பீஜப்பூர் சுல்தான், கிருஷ்ணதேவராயர் மீது போர் செய்ய நினைத்து பெரிய படையுடன் வந்தார். ஆற்றில் மிகவும் அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அக்கரையில் கூடாரம் போட்டு அங்கேயே உட்கார்ந்தார்கள். கிருஷ்ணதேவராயர் ஆற்றின் இந்தப்பக்கத்திலிருந்து அந்த பெரிய சேனையைப் பார்த்தார். உடனே கிருஷ்ணதேவராயரின் ஆட்கள், “நாம் ஆற்றை சில இடங்களில் தாண்ட முடியும். நாம் உள்ளூர் மனிதராக இருப்பதால், நாமே இந்த ஆற்றைக் கடந்து அவர்களை முதலில் முடித்துவிடலாம். ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டால், அவர்கள் இங்கே வந்து நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்” என்றார்கள். இவருக்கும் ஒரு போர் வீரனாக இது தான் சரி என்று தோன்றியது. அவருடைய ஆஸ்தானத்தில் ஒரு ஜோசியர் இருந்தார். “நேரம் எல்லாம் நன்றாக இருக்கிறதா? இப்போது போகலாமா?” என்று அவரைக் கேட்டார்கள். அதற்கு அந்த ஜோசியர் “இப்போது நீங்கள் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து, நீங்கள் இப்போது போகவே கூடாது” என்று சொல்லிவிட்டார். அரசருக்கு ஒரே கவலை வந்துவிட்டது. இது தெனாலிராமன் காதில் விழுந்தது. அவர் அந்த ஜோசியரை வரவழைத்து, “உங்கள் ஜாதகப்படி நீங்கள் எத்தனை வருடம் இருப்பீர்கள்?” என்று கேட்டார். “80 வருடம்” என்று ஜோசியர் பதில் சொன்னார். “சரி, நான் உன் உயிரை இப்போது எடுக்கப்போகிறேன். நீதான் எப்படியிருந்தாலும் சாக மாட்டாயே” என்று தெனாலிராமன் மிரட்ட, ஜோசியர் பயந்து தனது தப்பை ஏற்றுக்கொண்டார். “பீஜப்பூர் சுல்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்று சொன்னார். எப்படியும் அவர் தலையை துண்டித்துவிட்டார்கள். வாழ்க்கை யார் கையில்? அந்த கிரகம் எங்கே போகிறது? இந்த கிரகம் எங்கே போகிறது? அவையெல்லாம் எங்கோ போகட்டும். அந்த கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? படைத்தலுக்கு மூலமானது உங்களுக்குள்ளேயே இருக்கும்போது ஜடப்பொருளைப் பார்த்து எதற்கு அதன் பின்னால் போகிறீர்கள்? ஏழரை வருடம் சனி இருக்கட்டுமே, அல்லது பதிமூன்று வருடம் இருக்கட்டுமே, நமக்கென்ன? இப்பொழுது உங்களுக்கெல்லாம் விசா கொடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினால், சனி இருந்தாலும் கவலைப்படாமல் போய்விடுவீர்கள்தானே? மனதில் பயம் வந்துவிட்டால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம். எல்லாவற்றையும் தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? இதிலேயே சிக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? படைத்தலுக்கு மூலமானது நமக்குள்ளே இருக்கிறபொழுது, இந்த கிரகமோ, நட்சத்திரமோ நம்மைத் தடுக்க முடியுமா? நாம் உள்ளே இருக்கிற படைத்தவன் கூட தொடர்பு வைத்துக்கொண்டால், எந்த கிரகம் எங்கே போனாலும், நாம் எங்கு போக வேண்டுமோ, அங்குதான் போவோம். எப்பொழுது நீங்கள் ஆன்மீக வழியில் இருக்கிறீர்களோ பின்னர் அவையெல்லாம் பொருட்டல்ல. ஆன்மீகம் என்றால் என்னவென்றால் நம்முடைய விதியை நம் கையில் எடுத்துக் கொள்வது. “என்னுடைய கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். என் அப்பா கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முக்தி நோக்கத்தில் போகிறேன்!” அப்படியென்றால் என்ன அர்த்தம்? என்னுடைய விதியை என் கையில் எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றுதானே அர்த்தம். எப்பொழுது படைத்தலுக்கு மூலமாக இருக்கிற தன்மையுடன் உங்களுக்கு தொடர்பு வந்துவிட்டதோ, அதற்குப் பிறகு கிரகங்களோ, நட்சத்திரங்களோ, சுற்றியிருக்கிற சூழ்நிலையோ உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது.

Friday, February 20, 2015

மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்

ஆண்கள் கவனத்திற்கு:
===============
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.  5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி  லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின்  அவள் இவனது கன்னத்தில்  ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.  இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.  லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி  வாயடைத்தான்.  வீட்டிற்கு நடக்கிறார்கள்.
®
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்.  நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - !!!




மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - !!!

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
"தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.

அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி

"குப்பையை குறை" என்றார்.

ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.
ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.

உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும். அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.

அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.

Vaazhkkai vaazhvatharkae....


இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …



இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …

“ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது…. அது எப்ப அப்பா தூங்கும்?”

“அது தூக்கம் வரும்போது தூங்கும்…”

“கொசுக்கு வீடு எங்கேப்பா?”

“அதுக்கு வீடே இல்லை…”

“ஏம்பா வீடே இல்லை?”

“அது ரொம்பச் சின்னதா இருக்கே… அதான் வீடு இல்ல…”

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே… எனக்கு வீடு இருக்கே.”

“இது அப்பா உனக்கு கட்டித் தந்தது.”

“அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?”

“அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல..”

“கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?”

“கடவுள்.”

“கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?”

“கடிக்காது.”

“ஏம்பா கடிக்காது?”

“கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்.”

“கடவுள் நல்லவராப்பா?”

“ரொம்ப நல்லவர்.”

“அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?”

“அது அப்படித்தான். நீ தூங்கு.”

“கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?”

“அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்.”

“ஒரே ஒரு கேள்விப்பா? “

“கேட்டுத் தொலை…”

“கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?”

“அதுக்குப் பல்லே இல்லை…”

“பிறகு எப்படிக் கடிக்கும்?”

“அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்.”

“பேயைக் கொசு கடிக்குமாப்பா?”

‘இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?”

“நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?”

In Heaven - Joke



A Priest dies & is waiting in line at heavens gate.

Ahead of him is a guy, fashionably dressed, in dark sun glasses, a loud shirt, leather jacket & jeans.

God to the guy : Who r u ?

Guy : I am Udupi-Mangalore Express Bus driver.

God : Take this gold robe & enter kingdom of heaven.

God to the Priest : Who r u ?

Priest : I am a priest & spent 40yrs preaching good to people.

God : Take this cotton robe and enter heaven.

Priest : God, how come that foul mouthed, rash driver gets a gold & I spent all my life preaching good get cotton.

God : Results, my son, results.

While you preached, people slept, when he drove, people really prayed...

“Its Performance, not Position that Counts !!”
Awarded Joke

கைக்குத்தல் அரிசியின் பலன்கள்...



கைக்குத்தல் அரிசியின் பலன்கள்...

''இந்த அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதுதான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கைதான்.

இன்னொரு நுட்பமான விஷயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது. இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது. சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன், எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.

கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும். இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது. வயிறு நிறைந்துவிடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர்.